மின் கட்டண உயர்வை கண்டித்து கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்திருந்தது. அதன்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இமின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செங்கோட்டையன் தலைமை வகித்தார். பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பண்ணாரி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. கோபி , பவானிசாகர் மற்றும் அந்தியூர் தொகுதியிலிருந்து ஏராளமான அதிமுகவினர் இதில் பங்கேற்றனர்.